Skip to content

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்? அதிரடி விசாரணை!

சென்னை,ஜன.06; தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 41 பேரின் உயிகரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்? அதிரடி விசாரணை!ரைப் பறித்த இந்த துயரச் சம்பவம் குறித்து சிபிஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பின்னணி: கரூரில் நடந்தது என்ன?

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், நடிகர் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

உச்ச நீதிமன்ற உத்தரவும் சிபிஐ விசாரணையும்

இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்பார்வையிட்டு வருகிறது.

தவெக நிர்வாகிகளிடம் ஏற்கனவே விசாரணை

சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே கரூரில் முகாமிட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் கடந்த மாதம் 29ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்களை பெற்றனர்.

நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன்; வரும் 12ஆம் தேதி ஆஜர்?

இதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைவர் என்ற முறையில் மற்றும் கூட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில், விளக்கம் கேட்க விஜய்க்கு இன்று (06.01.2026) சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி விசாரணைக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி விஜய்க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *