Skip to content

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

சென்னை,ஏப்.09; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 30ஆம் தேதி தொடங்கி கடந்த 6ஆம் தேதி முடிவடைந்தது.

நான்கு விடுமுறை நாட்களை தவிர்த்து எஞ்சிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

234 தொகுதிகளில் 7,599 வேட்புமனுக்கள் தாக்கலாகின

முதல் நாளான மார்ச் 30ஆம் தேதி 573 மனுக்களும், 2ஆம் நாளான கடந்த 2ஆம் தேதி 1,361 மனுக்களும், 3ஆம் நாளான 4ஆம் தேதி 3,430 மனுக்களும், கடைசி நாளான 6ஆம் தேதி 7,599 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7ஆம் தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.

2,480 வேட்புமனுக்கள் தள்ளுபடி: தேர்தல் ஆணையம்

இதன் பின்னர் 5,081 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,480 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் 38 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தவெக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 233ஆனது

குறிப்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி போட்​டி​யிடும் சேலம் மாவட்டம் எடப்​பாடி தொகு​தி​யில் வேட்​புமனு தாக்​கல் செய்த தவெக வேட்​பாளர் மற்​றும் அவருக்கு மாற்று வேட்​பாளர் ஆகிய இரு​வரின் வேட்பு மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​டன. இதனால் அக்கட்சி போட்​டி​யிடும் தொகு​தி​களின் எண்​ணிக்கை 233 ஆக குறைந்​துள்​ளது.

இன்று வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசிநாளாகும். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவரின் மூலமாகவோ வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்

அதன்படி இன்று (ஏப்ரல் 9, 2026) காலை 11 மணியிலிருந்து 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்து இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (Ballot Paper) அச்சிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தபால் வாக்குகள் அச்சிடும் பணி நாளை தொடக்கம்

அதன் அடிப்​படை​யில் நாளை தபால் வாக்​கு​கள் அச்​சிடும் பணி​கள் தொடங்​கு​கின்​றன. அதற்​கடுத்து பயிற்​சிக்கு வரும் தேர்​தல் அலு​வலர்​கள், வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்கு தபால் வாக்​கு​கள் வழங்​கப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் ஒவ்​வொன்​றி​லும் 16 வேட்​பாளர்​கள் இடம்​பெறு​வர்.

வேட்​பாளர்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப கூடு​தல் இயந்​திரங்​கள் சேர்க்​கப்​படும். அதி​கபட்​ச​மாக 4 அலகு​களை சேர்க்க முடி​யும். அவற்​றில் 63 வேட்​பாளர்​கள் மற்​றும் ஒரு நோட்டா பொத்​தான் இடம்​பெறும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் தயார்

ஏற்​கெனவே, தொகுதி வாரி​யாக வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பிரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றில் வேட்​பாளர்​களின் பெயர்​கள் மற்​றும் சின்​னங்​களை பொருத்​தும் பணிகள் ஓரிரு தினங்​களில் தொடங்க உள்​ளன.

இதற்கான பயிற்சியும் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூத் ஸ்லிப் நாளை​முதல் வழங்​கப்பட உள்​ளது. ஏப்​.17-ம் தேதிக்​குள் முடிக்​க​வும் மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

23ஆம் தேதி தேர்தல்; வாக்களிக்க 5.73 கோடி பேர் தகுதி

வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறும் வாக்​குப்​ப​தி​வில் 5.73 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க தகுதி பெற்றுள்​ளனர். அதற்​காக 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் தயார்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இதில் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மான மற்​றும் மிக​வும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. பாது​காப்​புப் பணி​யில் 23 ஆயிரத்துக்​கும் மேற்​பட்ட துணை ராணுவப் படை​யினர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *