Skip to content

நீண்டகால காதலியை கரம் பிடிக்கிறார் கிரிக்கெட் வீரர் குல்தீப்; மணவிழாவிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள்! விராட் கோலி, ரோகித் வருகை!

முசோரி,மார்ச்.14; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப், தனது நீண்ட கால தோழியான வன்ஷிகாவை இன்று (மார்ச் 14, சனிக்கிழமை) கரம் பிடிக்கிறார். பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்தத் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோகித் மீண்டும் ஒன்றாக இணையவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்ரகாண்டில் நடைபெறும் நட்சத்திரத் திருமணம்

இந்திய அணியின் ‘சைனாமேன்’ என்று அழைக்கப்படும் குல்தீப் மற்றும் வன்ஷிகா ஆகியோரின் திருமணம் உத்ரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள புகழ்பெற்ற ‘சவோய் ஹோட்டலில்’ (Savoy Hotel) நடைபெறுகிறது. இதற்காக அந்த ஹோட்டல் முழுவதும் மூன்று நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமாகவும், நெருக்கமான உறவினர்கள் முன்னிலையிலும் இந்த மணவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விராட் – ரோகித் வருகை; மீண்டும் ஒரு சந்திப்பு

இந்த திருமண விழாவின் மிக முக்கிய ஈர்ப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் கருதப்படுகிறார்கள். டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்த நட்சத்திர வீரர்கள் குல்தீப்பின் திருமணத்தில் ஒன்றாகக் கலந்து கொள்வது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இவர்களுடன் ஜஸ்பிரித் பும்ராவும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்தில் பங்கேற்கும் இதர கிரிக்கெட் பிரபலங்கள்

குல்தீப் யாதவ்வின் திருமண விழாவில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், யுஸ்வேந்திர சாஹல், ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற ஹல்தி (Haldi) எனப்படும் மஞ்சள் பூசும் விழாவில் யுஸ்வேந்திர சாஹல் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது “சகோதரனின்” திருமணத்திற்காக தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், திருமணத்தில் நிறைய நடனமாடப் போவதாகவும் சாஹல் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி

முசோரியில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி (Reception) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

காதலியை கரம்பிடிக்கும் குல்தீப் குவியும் வாழ்த்துகள்

குல்தீப் மற்றும் வன்ஷிகா ஆகியோரின் இந்த புதிய தொடக்கத்திற்கு கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் பெரும் நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் கூடுவதால், முசோரி தற்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *