Skip to content

வர்த்தக ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்: டிரம்புக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

டெல்லி,பிப்.07; இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பில் புதிய புரட்சி

இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு இது மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

பயனடையப்போகும் துறைகள்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பின்வரும் துறையினர் பெரும் பலனைப் பெறுவார்கள்:

விவசாயிகள் மற்றும் மீனவர்கள்: விளைபொருட்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல புதிய வாய்ப்புகள்.

MSME மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: சிறு, குறு தொழில்கள் மற்றும் தொடக்க நிலை தொழில் முனைவோர் புத்தாக்க தொழில் முனைவோர்களுக்குத் தேவையான சர்வதேச அங்கீகாரம் மற்றும் முதலீடு.

தொழில்முனைவோர்: அமெரிக்க சந்தையை எளிதாக அணுகும் வசதி.

வலுவடையும் இருநாட்டு உறவு

அமெரிக்கா விதித்திருந்த இறக்குமதி வரிகளை 18 சதவீதமாகக் குறைத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், “வளர்ந்த பாரதம்” (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய உலகளாவிய கூட்டாண்மைகள் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் என்பது வெறும் பொருளாதார உடன்பாடு மட்டுமல்ல, இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்துவதன் மூலம், வரும் காலங்களில் இந்தியா ஒரு பொருளாதார சக்தியாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *