Skip to content

உலகக் கோப்பை கால்பந்து; செக் குடியரசு உடனான போட்டி; கடைசி நிமிட கோலால் கனவைத் தக்கவைத்த தென்னாப்பிரிக்கா!

அட்லாண்டா,ஜூன்.19; உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘ஏ’ பிரிவில் நேற்று (ஜூன் 18, வியாழன்) நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் செக் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் (Draw) முடித்தன. இந்த முடிவின் மூலம் இரு அணிகளும் தங்களது அடுத்த சுற்று வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

ஆட்டத்தின் முக்கிய தருணங்கள் செக் குடியரசின் ஆரம்பகால ஆதிக்கம்:

ஆட்டம் தொடங்கிய 6ஆவது நிமிடத்திலேயே செக் குடியரசு அணி ஒரு கோலடித்து முன்னிலை பெற்றது. விளாடிமிர் கூஃபல் மூலம் நீண்ட தொலைவிலிருந்து கிடைத்த பந்து (Long Throe-In) லாங் த்ரோ-இன் தென்னாப்பிரிக்கா தடுப்பாட்டக்காரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அலெக்சாண்டர் சோஜ்கா கொடுத்த பாஸை மிகத் துல்லியமாக கோலாக மாற்றினார் மிக்கல் சாடிலெக் (Michal Sadílek).

தென்னாப்பிரிக்காவின் போராட்டம்:

முதல் பாதியில் செக் குடியரசின் தடுப்பாட்டத்தை மீறி தென்னாப்பிரிக்க வீரர்களால் இலக்கை நோக்கி பந்தை செலுத்த முடியவில்லை. எனினும், இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் போக்கை மாற்ற மாற்று வீரர்கள் களம் புகுத்தப்பட்டனர்.

திருப்பத்தை ஏற்படுத்திய பெனால்டி:

ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் தபெலோ மாசெகோ அடித்த லாங்-ரேஞ்ச் ஷாட், செக் குடியரசின் பவெல் சுல்க் கையில் பட்டதால் தென்னாப்பிரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

கண்ணீருடன் தொடங்கி புன்னகையுடன் முடித்த மொகோனா

தேசிய கீதத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய தென்னாப்பிரிக்காவின் டெபோஹோ மொகோனா (Teboho Mokoena), இந்த இக்கட்டான பெனால்டி வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் தள்ளினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

புள்ளிகள் பட்டியல் மற்றும் அடுத்த சுற்று வாய்ப்பு

முதல் போட்டிகளில் முறையே தென்கொரியா மற்றும் மெக்சிகோவிடம் தோல்வியடைந்திருந்த இரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தில் கிடைக்கும் புள்ளிகள் மிக அவசியமானதாக இருந்தது.

தென்னாப்பிரிக்கா தனது அடுத்த போட்டியில் தென்கொரியாவை எதிர்கொள்ளும், ஆனால் இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்றதால் நட்சத்திர வீரர் மொகோனா அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். செக் குடியரசு அணி தனது அடுத்த சுற்றை உறுதி செய்ய வலுவான மெக்சிகோ அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த 1-1 டிரா உலகக்கோப்பை குரூப் ‘ஏ’ பிரிவின் அடுத்த சுற்றுப் போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. செக் குடியரசு ஆட்டத்தை முழுமையாகத் தன் வசம் வைத்திருக்கத் தவறியதற்குப் பெரும் விலை கொடுத்துள்ளது. அதே வேளையில், இறுதிவரை போராடிய தென்னாப்பிரிக்கா தங்களின் உலகக்கோப்பை நாக்-அவுட் கனவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *