உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், கான்பூரில் உள்ள சத்திரபதி ஷாகு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.
அவர் தனது உரையில், “பெண்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகவோ, ஆசிரியர்களாகவோ ஆவதை இலக்காகக் கொள்வதற்கு முன்பாக, முதலில் சிறந்த தாயாக மாறுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “பெண்களின் தொழில்முறை வெற்றி என்பது குடும்பப் பொறுப்புகளை தியாகம் செய்து கிடைக்கக் கூடாது. தொழில் முன்னேற்றத்துடன் குடும்ப வாழ்க்கைக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் எப்படி சமைக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படை வாழ்க்கைத் திறன்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
ஆளுநரின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும், கல்வி மற்றும் சமூக வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சிலர் குடும்ப மதிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கருத்தாக இதை வரவேற்றுள்ள நிலையில், மற்றவர்கள் பெண்களின் தொழில்முறை முன்னேற்றம் மற்றும் தனிநபர் தேர்வுகள் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த உரை, பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து மீண்டும் ஒரு தேசிய அளவிலான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
