Skip to content

“வெற்றி விவசாயி” விருதுக்கு ரூ.67.50 லட்சம் நிதி – அமைச்சர் வினோத் அறிவிப்பு.

அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் “வெற்றி விவசாயி” விருது வழங்கப்படும்

“வெற்றி விவசாயி” விருது வழங்குவதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார். நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள், பருத்தி உள்ளிட்ட ஒன்பது வகை பயிர்களை குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ஊக்கம்

வேளாண் அமைச்சர் வினோத் கூறுகையில், “வெற்றி விவசாயி” விருது திட்டத்தின் கீழ் சிறந்த மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் விருதுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.50,000 மற்றும் இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.

மொத்தம் 90 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளிடம் போட்டி மனப்பான்மையையும், நவீன சாகுபடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆர்வத்தையும் அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *