பிரதமர் மோடியின் கருத்தை விமர்சித்த கெஜ்ரிவால்
“அம்பேத்கரும் கூட அறிவுஜீவி நக்சல் என அழைக்கப்பட்டிருப்பார்” என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோர் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிரதமர் மோடியின் கூற்றுப்படி அவர்களும் ‘அறிவுஜீவி நக்சல்கள்’ என்றுதான் அழைக்கப்பட்டிருப்பார்கள் என அவர் விமர்சித்துள்ளார்.
“கேள்வி கேட்பவர்கள் அறிவுஜீவி நக்சல்கள்”
பிரதமர் மோடியின் கூற்றுப்படி, நாட்டில் எதிர்த்து கேள்வி கேட்கத் துணிச்சல் உள்ளவர்கள் ‘திமாகி நக்சல்கள்’ என அழைக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தானும் ‘அறிவுஜீவி நக்சல்’ என்பதில் பெருமை கொள்வதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்ற வரலாற்று தலைவர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியின் கருத்தை விமர்சித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
