8 வார OTT விதிக்கு எதிர்ப்பு – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
செப்.1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன. மேலும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட திரைப்படம் சார்ந்த அனைத்து பணிகளையும் நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகாது
செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் புதிய மற்றும் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 வார OTT விதிக்கு எதிர்ப்பு
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் 8 வார காலத்திற்குப் பிறகுதான் OTT தளங்களில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் அளித்தால் மட்டுமே அந்தந்த திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கப்படும் என்ற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த முடிவைக் கண்டித்தே செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல், திரைப்படம் சார்ந்த பணிகளை நிறுத்துவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் புதிய திரைப்படங்களின் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு பணிகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படக்கூடும்.
