சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடிப்பதால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என 7 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. டெல்லி, வாரணாசி செல்லும் 4 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வருகை தரும் 3 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
மேலும், 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள்
இயக்கம் குறித்து பயணிகள் அந்ததந்த நிறுவனங்களிடம் தெளிவாக அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லி, அகமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்குச் செல்லும் சுமார் 7 விமானங்கள் 1 முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட மாநிலங்களில் நிலவும் மிகக் கடுமையான பனிமூட்டம் மற்றும் மோசமான பார்வைத்திறன் காரணமாக அங்கிருந்து கிளம்பும் மற்றும் அங்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சில அறிவுறுத்தல்களை வழங்கிய விமான நிறுவனங்கள்
ஒரு விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர தாமதமானாலோ அல்லது ரத்தானாலோ, அதே விமானம் சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் சேவையும் பாதிக்கப்படுகிறது.
விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்குக் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன:
விமான நிலையைச் சரிபார்க்கவும்: விமான நிலையத்திற்குப் புறப்படும் முன், நீங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியில் விமானத்தின் தற்போதைய நிலையை (Flight Status) சரிபார்த்துக் கொள்ளவும்.
முன்கூட்டியே செல்லவும்: சாலைகளிலும் பனிமூட்டம் காணப்படுவதால், விமான நிலையத்திற்குச் செல்லும் பயண நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டு முன்கூட்டியே கிளம்பவும்.
தொடர்பு கொள்ள: ரத்து செய்யப்பட்ட அல்லது தாமதமான விமானங்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
குறிப்பு: வரும் நாட்களில் பனிமூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரப் பயணங்களைத் திட்டமிடும் போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.
