Skip to content

கூப்பன் விவகாரத்தால் இளம்பெண் தற்கொலை செய்த விவகாரம்; திமுக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது!

திருச்சி,ஏப்.16; திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்​ணச்​சநல்​லூர் சட்டப்பேரவைத் தொகு​தி​யில் திமுக சார்பில் போட்டியிடும் கதிரவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது தாளக்​குடி ஊராட்​சிக்​குட்​பட்ட வாழக்​கட்டை பகு​தி​யில் திமுக​வினர் சிலர், வாக்​காளர்​களுக்கு நேற்று முன்​தினம் (ஏப்ரல் 14, செவ்வாய்) எவர்​சில்​வர் பாத்​திரங்​களை பரி​சாக வழங்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

கூப்பன் விநியோகத்தில் பிரச்னை; இளம்பெண்ணுக்கு வசை

அப்​போது, அந்த பகு​தி​யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் பிர​சாந்த் என்பவரின் மனைவி சிந்​துஜா (25) தனக்​கும் பரிசுப் பொருள் கொடுக்​கும்​படி கேட்​டதாகத் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அந்தப் பெண்ணை பரிசுப் பொருள் விநியோகித்த திமுகவினர் சிலர் தரக்குறைவாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

இதில் மனமுடைந்த அப்​பெண் நடந்த விவரங்​களை அன்று இரவு கணவர் பிர​சாந்​திடம் கூறி உள்​ளார். தொடர்ந்து மன உளைச்​சலில் இருந்த சிந்​துஜா, வீட்டை உள்​பக்​க​மாக தாழிட்​டுக் கொண்டு சேலை​யால் தூக்​குப் போட்​டுள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த கணவர், வீட்​டின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்​று,மனை​வியை அக்​கம் பக்​கத்​தினர் உதவி​யுடன் மீட்டு தனி​யார் மருத்​து​வமனைக்கு ஆம்​புலன்ஸ் மூலம் கொண்டு சென்​றார். ஆனால் அவர் செல்​லும் வழி​யிலேயே உயிரிழந்​தார்.

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

இதனிடையே, அவரை தற்​கொலைக்கு தூண்​டிய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி சிந்​துஜா​வின் உறவினர்​கள், திருச்​சி-சேலம் சாலை​யில் உத்​தமர் ​கோ​வில் மேம்​பாலத்​தில் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர்.

தகவலறிந்து வந்த கொள்​ளிடம் போலீ​ஸார், அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்​டனர். பின்​னர் அவர்​கள் கொள்​ளிடம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர்.

புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது

இதுதொடர்​பாக சிந்​துஜா​வின் தாயார் இளை​ய​ராணி அளித்த புகாரின்​பேரில், தற்​கொலைக்குதூண்​டியது, பெண் வன்கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, ராஜா, திமுக கிளைச் செய​லா​ளர் ராஜேந்​திரன், ரவிக்​கு​மார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்​திரன் மனைவி ராஜேஸ்​வரி, ராஜ்கு​மாரின் தாய் அங்​குமணி ஆகிய 6 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்​.

மேலும் தலைமறைவாக உள்ள திமுக நிர்​வாகிகள் சுரேஷ்கு​மார், ராஜ்கு​மார், ரவி மனைவிகார்த்​திகா ஆகியோரை போலீஸார் தேடி வரு​கின்​றனர். உயி​ரிழந்த சிந்துஜாவின் தாயாரை அதி​முக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் மு.பரஞ்ஜோதி சந்​தித்து ஆறுதல் கூறி​னார்.

இளம்பெண் தற்கொலை; தலைவர்கள் கண்டனம்

இதனிடையே, கூப்பன் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திமுகவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழ்நாடு பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *