Skip to content

“டெண்டரில் முறைகேடு” – முதலமைச்சர் அலுவலக மாற்றம் குறித்து எ.வ.வேலு கேள்வி

முதலமைச்சர் அலுவலக மாற்றம் குறித்து கேள்வி

டெண்டரில் முறைகேடு இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளதாக திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் பேசிய எ.வ.வேலு, முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், இந்த டெண்டரில் முறைகேடு இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

“பணிகளைத் தொடங்கிய பிறகு டெண்டர்?”

“நாங்கள் தூய்மையானவர்கள் என்று கூறினீர்கள். ஆனால், பணிகளைத் தொடங்கிய பிறகு இணையதளத்தில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது” என எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகம் மாற்றம் மற்றும் அதற்கான டெண்டர் நடைமுறை குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *