Skip to content

தொகுதி மறுவரையறை: 543 மக்களவை தொகுதிகளை நிரந்தரமாக்க வேண்டும் – முதல்வர் விஜய்

மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை தொடரவும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

543 மக்களவை தொகுதிகள் நிரந்தரமாக்க வேண்டும்

தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்குப் பிறகும், நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் முறையிலும் மாற்றம் ஏற்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும் என தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு

வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்

தொகுதி மறுவரையறை தொடர்பான தனித் தீர்மானத்தில் முக்கியமாக மூன்று அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:

1. மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

2. மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

3. மக்களவை மற்றும் அதற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *