அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியம் மாநாடு முக்கியமானது என குறிப்பிட்டார்.
மாநில சுயாட்சி ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 125 தீர்மானங்களை முதல்வர் விஜயிடம் வழங்கியதாக திருமாவளவன் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்து திருமாவளவன் கருத்து
மேகமலை, அமுதன் கொலை விவகாரங்களை முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் திருமாவளவன் கூறினார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியோ அல்லது ஆட்சியோ மட்டும் பொறுப்பு அல்ல என்றும், அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக முதல்வரிடம் 125 தீர்மானங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
