அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு
மகப்பேறு விடுப்பு தொடர்பாக அரசு பெண் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது மூன்றாவது குழந்தைக்கும் இந்த விடுப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்றாவது குழந்தைக்கும் சம்பளத்துடன் விடுப்பு
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்கள், குழந்தை பிறப்பைத் தொடர்ந்து தங்களது உடல்நலம் மற்றும் குழந்தையின் பராமரிப்பை கருத்தில் கொண்டு ஓராண்டு மகப்பேறு விடுப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதன் மூலம் அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை கிடைத்துள்ளதுடன், குழந்தை பராமரிப்புக்கும் போதிய கால அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
