முன் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பியது ஏன்? – ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
மாணவர்கள் போராட தடை சுற்றறிக்கை தொடர்பாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சிந்தியா செல்விக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பியது ஏன்?
கல்லூரிக் கல்வித் துறையின் முன் அனுமதி மற்றும் ஒப்புதலைப் பெறாமல் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சிந்தியா செல்விக்கு, கல்லூரிக் கல்வி ஆணையர் பொன்னையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒரு வாரத்துக்குள் விளக்கம்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சிந்தியா செல்விக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதனை அனுப்பிய அதிகாரியிடமே விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
