மின்வெட்டுடன் அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முடியாத அவலம்
மின்வெட்டு பிரச்னையில் மக்கள் தவிப்பு என்ற நிலை தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட செல்ஃபோன் எண்களுக்கு உரிய கட்டணம் செலுத்தப்படாததால், பெரும்பாலான அதிகாரிகளின் செல்ஃபோன் எண்களுக்கு இன்கம்மிங் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டணம் செலுத்தாததால் சேவை துண்டிப்பு?
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட செல்ஃபோன் எண்களுக்கான கட்டணம் செலுத்தப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நெட்வொர்க் மாற்றுவதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மின்வெட்டு உள்ளிட்ட அவசர பிரச்னைகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள முயற்சிக்கும் பொதுமக்கள், அதிகாரிகளை அணுக முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தேவைப்படும் நிலையில், தொடர்பு எண்களின் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
