கர்நாடகா தண்ணீர் திறக்காததால் தமிழ்நாடு அரசின் அவசர நடவடிக்கை.
காவிரி நீர் உச்சநீதிமன்ற மனு தொடர்பாக, கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடாத நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு விகிதாச்சார அடிப்படையில் காவிரி நீரை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காவிரி நீரை நம்பி சாகுபடி செய்து வரும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விரைவான நீதிமன்ற தலையீடு தேவை என அரசின் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவதுடன், உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் உத்தரவை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
