Skip to content

‘அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்யவில்லை; நானே அரசு பள்ளியில் படித்தவள்’ – சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதிலடி.

‘என்னை விமர்சியுங்கள்; ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை அவமதிக்காதீர்கள்’ என உருக்கமான பதிவு

அரசுப் பள்ளி மாணவர்களை கேலி செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஒருவர் விளக்கம் அளித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “சிலர் ‘அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்தார்’ என்று பொய்யான கதையை பரப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆங்கிலத்தில் பேசுவதில் ஏற்பட்ட தடுமாற்றத்தை வைத்து இணையத்தில் கூட்டாக கேலி செய்வது, எதிர்காலத்தில் ஆங்கிலத்தில் சிரமப்படும் அரசு பள்ளி மற்றும் தமிழ் வழி மாணவர்களின் தன்னம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

“என்னை விமர்சியுங்கள்; என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்” என்றும், “என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களுடைய சொந்தக் குழந்தைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியிலும் படிக்கிறார்கள்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசு பள்ளி கல்வி, தமிழ் வழிக் கல்வி மற்றும் மொழித் திறன் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *