மே 3ஆம் தேதி நடைபெற்ற எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET தேர்வு தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியதையடுத்து, தேசிய தேர்வு முகமை (NTA) அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்வு முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சில மாணவர் அமைப்புகள் போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றன.
இதனிடையே, “நீட் தேர்வு ரத்து செய்யப்படலாம்” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து தேசிய தேர்வு முகமை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முக்கிய முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. NEET தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
