Skip to content

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு? உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பதவியேற்பு விழாவில் நடைபெற்ற இந்த தவறு ஆளுநர் உரையின்போதும் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவது இடத்திற்குக் கூட தள்ளப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர் அடையாளம், மரியாதை மற்றும் பண்பாட்டின் சின்னமாகும். அரசு நிகழ்ச்சிகளில் அதற்குரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் பல தரப்பினரிடையே வலுப்பெற்று வருகிறது.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. தமிழர் உரிமை மற்றும் மொழி மரியாதை குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *