கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கே.என்.நேருவும், திமுகவும் அஞ்சப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கே.என்.நேரு மீதான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய அரசின் “பூச்சாண்டிகளுக்கெல்லாம்” திமுக அஞ்சாது என்றும், சட்டத்தின் வழியில் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கே.என்.நேரு மீதான சோதனை தொடர்பாக திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
