வேர்ல்பூல் நிறுவன அதிகாரிகளை மிரட்டியதாக புகார் – 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய் சரவணக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேர்ல்பூல் நிறுவனத்தில் நடந்தது என்ன?
வேர்ல்பூல் நிறுவனத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மூத்த மேலாளர்களை மிரட்டியதாக சாய் சரவணக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவன அதிகாரிகளைத் தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்தப் புகாரின் அடிப்படையில் சாய் சரவணக்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குப் பதிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
