Skip to content

“தப்பா பேசிட்டேன்..!” – ஜே.கே. டயர்ஸ் விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. தாஹிரா விளக்கம்

ராணிப்பேட்டையில் இல்லாத ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய விவகாரத்தில் தாஹிரா எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

தாஹிரா எம்.எல்.ஏ., ராணிப்பேட்டையில் இல்லாத ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் நேற்று பேசியது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜே.கே. டயர்ஸ் பெயரை தவறுதலாக கூறிவிட்டேன். எனக்கு டைப் செய்து கொடுத்தவர்கள் தவறாக கொடுத்து விட்டனர். அதனால் பேசிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் செயல்படும் தொழிற்சாலை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று பேசும்போது, ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டதாக தாஹிரா தெரிவித்துள்ளார்.

தாம் பேசிய தகவல் தவறாக இருந்ததை சுட்டிக்காட்டிய நிலையில், தவெக எம்.எல்.ஏ. தாஹிரா தனது தரப்பு விளக்கத்தை தற்போது அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை பேச்சில் இடம்பெற்ற நிறுவனத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *