டிரினிடாட் மற்றும் டொபாகோ சுதந்திர தினத்தில் மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு சிறப்பு கௌரவம்
பிராவோ பொல்லார்ட் நரைன் பெயரில் அரங்குகள் டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. T20 கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் பார்வையாளர் அரங்குகள் அவர்களின் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளன.
டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயர் மாற்றம் நடைபெற்றது. இதன் மூலம் சர்வதேச மற்றும் T20 கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த மூன்று வீரர்களும் சொந்த மண்ணில் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
பிராவோ, பொல்லார்ட் மற்றும் நரைன் ஆகியோர் உலகின் முன்னணி T20 தொடர்களில் பல ஆண்டுகளாக விளையாடி, தங்களது அணிகளுக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளனர். குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணிக்காகவும் T20 லீக் போட்டிகளிலும் இவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் மூன்று T20 நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது, அவர்களின் கிரிக்கெட் பங்களிப்புக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
