வெளிநாட்டு உயர் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு
ஹெச்-1பி விசா கட்டணம் தொடர்பாக அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் புதிய அதிரடி திட்டத்தை முன்வைத்துள்ளது. அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்பு திறன் தேவைப்படும் பணிகளில் வெளிநாட்டினரை பணியமர்த்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு $103,265 வரை கூடுதல் கட்டணம் விதிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்துவதை குறைத்து, உள்நாட்டு அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
தொழில்நுட்பம், மென்பொருள், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் H-1B விசா மூலம் பணியமர்த்தி வருகின்றன. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பணியாளர்கள் இந்த விசா திட்டத்தின் முக்கிய பயனாளர்களாக உள்ளனர்.
நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் செலவு
புதிய கட்டணம் அமலுக்கு வந்தால், H-1B விசா மூலம் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு செலவு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இதனால் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளர்களை நியமிப்பதை விட, அமெரிக்க பணியாளர்களை நியமிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், H-1B விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்திய IT பணியாளர்களுக்கு தாக்கம்?
அமெரிக்காவில் பணியாற்றும் மற்றும் H-1B விசாவை எதிர்பார்க்கும் இந்திய IT professionals இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக புதிய பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர விரும்பும் நிறுவனங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படக்கூடும்.
இருப்பினும், இந்த கட்டண மாற்றம் தொடர்பான இறுதி நடைமுறைகள் மற்றும் அமலாக்க விதிகள் தெளிவாகும் வரை, இதன் முழுமையான தாக்கத்தை உறுதியாகக் கூற முடியாது.
